![]()
கிபி :944
திருவிசலூர், கும்பகோணம் வட்டம், தஞ்சை
இரண்டாம் ஆதித்தன் எனும் ஆதித்த கரிகால சோழனின் இரண்டாமாண்டு கல்வெட்டு கிபி 944 ஆம் ஆண்டில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள திருவிசலூர் சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைப் பற்றி கூறுகிறது.
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவதான பிரம்மதேயத்தில் அமைந்துள்ள திருவிசலூர் சிவன் கோயிலுக்கு ” கள்ளர் குல செல்வந்தர் ” ஒருவர் நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளார்.
மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் நினைவாக இவ்வூர் அவனிநாராயண சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
இக்கொடைக்கு சாட்சியாக பெருங்குறி பெருமக்கள் ஒப்பமிட்டுள்ளனர்…
தொகுப்பு: இளையர் பெருமகன்


